துபாயில் மார்க்க அறிஞருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் மார்க்க அறிஞருடன் கலந்துரையாடிய நிகழ்ச்சி 11.02.2012 அன்று மாலை நியூ மஹாராஜ் உணவகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத் தலைவரும், கல்விக்குழுத் தலைவருமான அல்ஹாஜ் பி எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். ஈமான் அமைப்பின் மீலாது சிறப்புப் பேச்சாளராக வருகை புரிந்த மௌலவி முனைவர் அன்வர் பாதுஷா உலவி அவர்களுடன் ஈமான் நிர்வாகிகள் கலந்துரையாடினர்.
ஷரீஅத் சம்பந்தமான பல்வேறு வினாக்களுக்கு அவர் பதில் அளித்து நிர்வாகிகளின் சந்தேகங்களை தீர்த்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஈமான் நிர்வாகிகள் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி, துணை பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின், முஹைதீன், அப்துல் ரசாக், ஃபைசுர், அன்வர் பாஷா, படேஷா பஷீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications