துபாயில் ஈமான் அமைப்பு வழங்கும் தமிழகத்து நோன்புக் கஞ்சி

இது குறித்து ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி கூறுகையில், ஈமான் அமைப்பு கடந்த 1976ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அமைப்பு கல்வி மற்றும் சமுதாய மேம்ப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமையிலும், துணை தலைவர்கள் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் மற்றும் எம். அப்துல் ரஹ்மான் வழிகாட்டுதலிலும், பொதுச் செயலாளர் ஏ. லியாக்கத் அலி, துணை பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர்கள் காயல் யஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹமீது யாசின், கல்விக்குழுச் செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், இஃப்தார் குழுவினர் கோவை இல்யாஸ், படேஷா பஷீர், வி.களத்தூர் ஷாகுல் ஹமீது, வி.களத்தூர் ஷர்புதீன், இஸ்மாயில் ஹாஜியார், ஜமால், முஹைதீன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் நோன்புக் கஞ்சி காய்ச்சி வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறிய அளவில் ஆரம்பித்து தற்பொழுது தினமும் 3,500க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கஞ்சி தயாரிக்கும் பணி கும்பகோணம் அன்வர் குழுவினரால் காலையில் ஆறு மணிக்கு துவங்கப்பட்டு நண்பகல் வரை தொடர்கிறது. அதன் பின்னர் அவை தனித் தனி கோப்பைகளில் ஊற்றப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
நோன்புக் கஞ்சியுடன் பேரிச்சம்பழம், தண்ணீர், இரண்டு சமோசாக்கள், ஆரஞ்சு, ஜுஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது என்றார்.
இச்சேவை குறித்து பலரது கருத்துக்கள் வருமாறு,
தமிழகத்திலிருந்து அலுவலகப் பணியின் காரணமாக அமீரகம் வந்த கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தகுமார் ஈமான் அமைப்பு அமீரகத்தில் தினமும் 3,000 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு நோன்புக் கஞ்சி வழங்குவதை அறிந்து ரமலானின் முதல் நாள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இது குறித்து நந்தகுமார் கூறுகையில், ஈமான் அமைப்பின் நிர்வாகிகளின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டுகிறேன். அமீரகத்தில் தமிழக சுவையுடன் கூடிய நோன்புக் கஞ்சி ஏதோ தமிழகத்தில் இருப்பது போன்றதொரு உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.
இனம், மதம், மொழி என்ற பேதமின்றி இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர், அரபு நாட்டவர், பங்களாதேசைச் சேர்ந்தவர், ஆப்பிரிக்க நாட்டவர் என உலக நாட்டவர் அனைவரும் ஒருங்கிணைந்து உலக ஒற்றுமையினைப் பறைசாற்றும் நிகழ்வாக இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றார்.
நீக்ரோ நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வரிசையாக பரப்பி வைக்கப்பட்டிருந்த நோன்பு திறப்பு உணவுகளைப் பார்த்து சொன்னார்:
"வெரி நைஸ்... நோன்பாளிகளுக்கு இப்படி உணவு தருபவர்களை அல்லாஹ் விரும்புகிறான்!"
கல்லூரி மாணவியைப் போல் இருந்த ஒரு இளம்பெண் அங்கே வரிசையாய் நோன்பு திறக்க உட்கார்ந்தவர்களை தனது கேமராவில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் "நீங்க யார்? ஏன் இதை போட்டோ எடுக்கிறீர்கள்? என்பதை தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்ட போது அதற்கு அந்தப் பெண் சொன்ன பதில் :
"நான் ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவள். என் பெயர் மோனிகா. முஸ்லீம்கள் ரம்ஜான் மாதத்தில் இறைவனை பிரார்த்தித்து உணவு உண்ணாமலும், தண்ணீர் பருகாமலும் நோன்பு வைக்கும் இந்த செயலும், நோன்பு திற்க்கும்போது ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் இப்படி சரிசமமாக உட்கார்ந்து சாப்பிடுவதும் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இதை என் நாட்டு மக்களுக்கும், என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் காண்பிப்பதற்காகவே போட்டோ எடுக்கிறேன்."
எதிரில் கடைவைத்திருந்த சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு கடை உரிமையாளர் கூறுகையில்,
"நான் இங்கே 2 வருஷமாக இந்த கடையை நடத்தி வருகிறேன். ரமலான் மாதத்தில் ஈமான் அமைப்பு நடத்தும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியைப் பார்த்து நான் என் கடையில் வேலை பார்க்கும் இஸ்லாமியர்களுக்கு என் செலவில் பழங்கள், பழரசங்கள், உணவு வாங்கிக் கொடுத்து அவர்கள் நோன்பு திறப்பதற்கு உதவி செய்வதில் என் மனதுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அவர்களும் மகிழ்ச்சி அடைந்து என்மீது சகோதர பாசத்துடன் பழகுகிறார்கள். விசுவாசமாய் உழைக்கிறார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் தங்கள் வீட்டு விஷேசத்தை செய்வதைப்போல் ஈடுபாட்டோடு செய்து வருகின்றனர்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications