துபாயில் இந்திய தூதரகம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
இந்திய கன்சல் ஜென்ரல் சஞ்சய் வர்மா வரவேற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் சமூகத்திற்கு நமது பங்களிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஸ்மாஸ் தலைவர் ராம் புக்ஷானி பேசுகையில், தான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமீரகத்தில் வசிப்பதாகவும், தனது தாய் நாட்டில் இருப்பது போன்ற உணர்வினை பெறுவதாகவும் தெரிவி்ததார். மேலும் இஸ்லாமிய சகோதரர்களுடன் இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சியினை அளித்துள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மனித வள மேம்ப்பாட்டுத்துறை சீனியர் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் எம். அக்பர் கான், இந்திய சமூக நல மைய கன்வீனர் கே. குமார், துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், இணை பொதுச்செயலாளர் பிரசன்னா, இந்திய தூதரக அதிகாரிகள், தொழில் அதிபர்கள், அமீரகப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications