ஷார்ஜாவில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் பெற்றோர் தின‌ கொண்டாட்ட‌ம்

Subscribe to Oneindia Tamil

Sharjah
ஷார்ஜா: ஷார்ஜாவில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின்(INK) 140வது கலந்துரையாடல் 08.06.2012 அன்று ஷார்ஜா அல்கத்தாரி பண்ணை இல்லத்தில் நடைபெற்றது.

செல்வி.பிரவீனா சண்முகம் இறைவணக்கம் பாட, அதைத்தொடர்ந்து சங்கப்பாடலை செல்வி. சுபஸ்ரீ மணிகண்டன், செல்வி அனுஸ்ரீ மணிகண்டன் முழங்க, செல்வன் அஜய் வளத்தப்பன் குறளமுதம் வழங்கினார்.

சங்க செயலாளர் திரு. முத்துராமன் கதிரேசன் வரவேற்புரையாற்றினர். தொடர்ந்து தலைவர் திரு. ரமேஷ் ராமநாதன் தலைமை உரை ஆற்றினர். இதில் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கிக் கூறினார்.

140வது கலந்துரையாடல் பெற்றோர் தினமாக( ஆத்தா அப்பாச்சி தினமாக) கொண்டாடப்பட்டது. குழந்தைகள் அனைவரும் தங்கள் பெற்றோருக்கு வாழ்த்து அட்டை செய்து தங்கள் அன்பை வெளிபடுத்தினர்.

திரு.முத்துமாணிக்கம் நடத்திய வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. அதனை தொடர்ந்து விசாலாட்சி சண்முகம் எழுதி இயக்கிய காலம் மாறி போச்சு நகைசுவை நாடகத்தை பெண் உறுப்பினர்கள் ராஜி சரவணன், தெய்வானை முத்துராமன், உண்ணாமலை சிதம்பரம் மற்றும் குழந்தைகள் ஹரிணி ரமேஷ்,அலமு கண்ணன், பிரவீன சண்முகம், மீனாக்ஷி முத்துராமன் மற்றும் அலமு ராமசாமி இணைந்து நடிக்க அனைவரும் ரசித்தனர். இதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.பொருளாளர் ஞானசம்பந்தம் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+