துபாயில் 'குட்டீஸ்' கலக்கிய டான்ஸ் நிகழ்ச்சி
துபாய்: துபாய் பிரசித்தம் குழுவினரின் நடன நிகழ்ச்சி 01.12.2012 அன்று மாலை குளோபல் வில்லேஜின் இந்தியா பெவிலியனில் நடைபெற்றது.
பிரசித்தம் குழுவினரின் நடன நிகழ்ச்சி 30.11.2012 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் துபாயில் பெய்த கன மழை காரணமாக நிகழ்ச்சி டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி கடந்த 1ம் தேதி மாலை குளோபல் வில்லேஜின் இந்தியா பெவிலியனில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டதையும் பொருட்படுத்தாது 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர்.
நிகழ்ச்சியை ஆசிரியை கவிதா பிரசன்னா ஒருங்கிணைத்தார். துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தனது வாழ்த்துரையில் குழந்தைகளின் தனித் திறனை வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சியை நடத்தி வரும் பிரசன்னா குடும்பத்தினருக்கும், நிகழ்ச்சிக்கான வாய்ப்பினை வழங்கி வரும் இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் துபாய் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் ஏ. லியாக்கத் அலி, விழாக் குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications