துபாயில் நடந்த முதுவை சங்கமம் 2012

முதுவை சங்கம் 2012 நிகழ்ச்சிக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். ஆலோசகர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், துணைத் தலைவர்கள் எஸ்.முஹம்மது அலி, ஏ. அஹமது இம்தாதுல்லாஹ் மற்றும் ஏ. ஜாஹிர் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆலோசகர் சம்சுதீன் துவக்கவுரை நிகழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, துணைப் பொதுச் செயலாளர் கும்பகோணம் ஏ.முஹம்மது தாஹா மற்றும் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் மைதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பல்வேறு ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கினர். மணிச்சுடர் நாளிதழின் வெள்ளிவிழா மலரை ஏ. லியாக்கத் அலி வெளியிட டாக்டர் முஹம்மது இஸ்மாயில் பெற்றுக் கொண்டார்.
பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் வரவு செலவு அறிக்கையினை வாசித்தார். பல்வேறு பகுதிகளுக்கும் புதிய மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
விருதுநகர் மு. செய்யது ஹுசைன் வாழ்த்துப்பா பாடினார். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் அலுவலர் சந்திரசேகர் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை துணைத் தலைவர் ஏ. ஜாஹிர் ஹுசைன், துணைப் பொதுச் செயலாளர் ஹபீப் திவான், விழாக்குழு செயலாளர் எம். அஹமது சாதிக், ஆடிட்டர் முஹம்மது கனி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முதுவை மக்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications