For Daily Alerts
Just In
மஸ்கட்டில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ‘தமிழ்க் குடும்ப இஃப்தார்’
இஸ்லாமிய இலக்கிய கழக வளைகுடா பொறுப்பாளர் மற்றும் மஸ்கட் கழக தலைவர் திரு. பஷீர் முகமது துவக்க உரையாற்றினார். ஜனாப். மீரான் அவர்கள் ரமலான் பற்றிய உரை நிகழ்த்தியதோடு பிரார்த்தனையும் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மஸ்கட் தமிழ் முஸ்லீம் பிரமுகர்கள், இலக்கிய கழக உறுப்பினர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்று திரு. பஷீர் முகமது தெரிவித்தார்.
கழக நிர்வாகிகள் திரு. காமில் தாகிர்கனி, திரு.அப்துல் சலாம், திரு.அபுல்ஹசன், திரு. அன்வர் அலி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தினர். கழக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினரின் இனிய உபசரிப்போடு, சிறப்பு உணவு விருந்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
Comments
English summary
Islamic literary organization, Muscat threw an iftar party at Mezbaan restaurant on august 2.
Story first published: Tuesday, August 7, 2012, 16:32 [IST]