குவைத்: தமிழ் இஸ்லாமிய சங்கம் சார்பில் அரசியல் ஆய்வரங்கம்
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் முதல் முறையாக 'அரசியல் ஆய்வரங்கம்' என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப், இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம்.
இந்த சங்கத்தின் சார்பில் வரும் 4-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று தொழுகையைத் தொடர்ந்து , K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல், அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல், ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில், ஃகைத்தான், குவைத் என்ற முகவரியில் அரசியல் ஆய்வரங்கம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத் தலைவர் மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமை வகிக்கிறார்.
அரசியல் அரங்கில் சிறப்புரையாக வேலூர் லோக்சபா தொகுதி எம்.பி. M. அப்துர் ரஹ்மான் M.A, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை அல்ஹாஜ் J. அப்துல் மஜீத் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்த விழாவில் சங்கத்தின் 2013ம் ஆண்டு நாட்காட்டி வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications