துபாயில் நடந்த இஸ்லாமிய சொற்பொழிவு மற்றும் ஷரீஅத் கேள்வி பதில் நிகழ்ச்சி
துபாய் ஈமான் அமைப்பின் மீலாத் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள சென்னைப் பல்கலைக்கழக அரபி மொழித்துறை பேராசிரியர் முனைவர் அன்வர் பாதுஷா உலவி அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஷரீஅத் தொடர்பான கேள்விகளுக்கு விடையளித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியினை முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் ஸ்கை சீ இயக்குநர் அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ லியாக்கத் அலி, துணை பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன், ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், மூன் தொலைக்காட்சி ஆலோசகர் காயல் சுலைமான் லெப்பை ஆலிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.













Click it and Unblock the Notifications