For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லண்டனில் தமிழ் இளைஞர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்

By Siva
Google Oneindia Tamil News

Tamil youths celebrated new year in London
லண்டன்: லண்டன் மாநகரில் வசிக்கும் தமிழ் இளைஞர்கள் நடத்திய "புத்தாண்டு 2012" என்ற நிகழ்ச்சி கடந்த மாதம் 31ம் தேதி இரவு நடைபெற்றது.

லண்டன் மாநகரில் வசிக்கும் தமிழ் இளைஞர்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க "புத்தாண்டு 2012" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சி கடந்த மாதம் 31ம் தேதி இரவு லண்டனில் வெகு சிறப்பாக நடந்தது.

பாக்ஸர் மணி மற்றும் "ராக்கிரிஷ்" ராதா குழுவினர் விழாவை ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக நடத்தினர். கலை நிகழ்ச்சிகளை "லோட்டஸ்" பாலா வெகு சிறப்பாக தொகுத்து வழங்கினார். சிறார்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. திரு. உதயகுமார் "2012ல் இளையோர் கடமை" என்ற தலைப்பில் இளைஞர்களை கவரும் வகையில் சிறப்புரையாற்றினார்.

சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளை சதீஷ் மற்றும் கிருஷ்ணகுமார் தலைமையேற்று நடத்தி வைத்தனர். "கலைப் புயல்" கலையின் "2012ல் எம்.ஜி.ஆர்" என்ற நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணை எட்டியது. பெரியவர்களுக்கான "ஜோடி நம்பர் 1" நடன போட்டியை "ஹோண்டா" செல்வம் நடத்தி வைத்தார்.

2011ம் ஆண்டு நடந்த உலக முக்கிய நிகழ்வுகளை கோவிந்தராஜ் கோர்வையாக வழங்கினார். விழாவின் இறுதியில் 2012ல் உலகம் அமைதியை பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை சேது மற்றும் பாரதி தலைமையில் நடைபெற்றது.

English summary
Tamil youths living in London had arranged for 'New year 2012' on new year's eve in London. Cultural programmes and various competitions were held on that day. Tamils living in London had fun and welcomed new year with wide smile on their faces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X