லண்டனில் தமிழ் இளைஞர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்
லண்டன் மாநகரில் வசிக்கும் தமிழ் இளைஞர்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க "புத்தாண்டு 2012" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சி கடந்த மாதம் 31ம் தேதி இரவு லண்டனில் வெகு சிறப்பாக நடந்தது.
பாக்ஸர் மணி மற்றும் "ராக்கிரிஷ்" ராதா குழுவினர் விழாவை ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக நடத்தினர். கலை நிகழ்ச்சிகளை "லோட்டஸ்" பாலா வெகு சிறப்பாக தொகுத்து வழங்கினார். சிறார்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. திரு. உதயகுமார் "2012ல் இளையோர் கடமை" என்ற தலைப்பில் இளைஞர்களை கவரும் வகையில் சிறப்புரையாற்றினார்.
சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளை சதீஷ் மற்றும் கிருஷ்ணகுமார் தலைமையேற்று நடத்தி வைத்தனர். "கலைப் புயல்" கலையின் "2012ல் எம்.ஜி.ஆர்" என்ற நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணை எட்டியது. பெரியவர்களுக்கான "ஜோடி நம்பர் 1" நடன போட்டியை "ஹோண்டா" செல்வம் நடத்தி வைத்தார்.
2011ம் ஆண்டு நடந்த உலக முக்கிய நிகழ்வுகளை கோவிந்தராஜ் கோர்வையாக வழங்கினார். விழாவின் இறுதியில் 2012ல் உலகம் அமைதியை பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை சேது மற்றும் பாரதி தலைமையில் நடைபெற்றது.