துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை நடத்திய மீலாது விழா
துபாய்: துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் சார்பில் மீலாது பெருவிழா 10.02.2012 அன்று மாலை ஈடிஏ எம்.பி.எம். கேம்பில் நடைபெற்றது.
துவக்கமாக காஞ்சிரங்குடி மௌலவி அபுபக்கர் சித்திக் ஆலிம் மஹ்ளரி இறை வசனங்களை ஓதினார். விழாவிற்கு நாகர்கோவில் பீர் முஹம்மது தலைமை தாங்கினார். துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பண்புகளைப் போதிக்க வந்தவர் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் என விழாப் பேருரை நிகழ்த்திய மௌலவி முனைவர் அன்வர் பாதுஷா உலவி விவரித்தார்.
ஈடிஏ எம்பிஎம் பொது மேலாளர் ஹமீது, அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குற்றாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான், விழாக்குழு செயலாளர் ராம்நாடு பரக்கத் அலி, சோனாப்பூர் பகுதி செயலாளர் ரஹ்மத்துல்லா, லால்பேட்டை மௌலவி பஷீர் அஹ்மத் மன்பஈ உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
மக்கள் தொடர்பு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் நன்றியுரை நிகழ்த்தினார். நிறைவாக வாலிநோக்கம் கலீல் ரஹ்மான் பிலாலி துஆ ஓதினார். ஹெச்.ஆர்.எம். மற்றும் எம்.பி.எம். கேம்ப் நிர்வாகிகள் அமானுல்லா உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.