27ல் துபாயில் அமீரக தமிழ்ச் சங்கத்தின் ஆடிபூரம் கொண்டாட்டம்
துபாய்: ஆடிபூரத்தை முன்னிட்டு அமீரக தமிழ்ச் சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் வரும் 27ம் தேதி துபாயில் உள்ள ஜே.எஸ்.எஸ். சர்வதேச பள்ளியில் நடைபெறுகிறது.
அமீரக தமிழ்ச் சங்கம் ஆடிபூரத்தை முன்னிட்டு கடந்த 3 ஆண்டுகளாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான கலை நிகழ்ச்சி வரும் 27ம் தேதி துபாயில் உள்ள ஜே.எஸ்.எஸ். சர்வதேச பள்ளியில் நடைபெறுகிறது. இந்திய பாரம்பரிய நடனம், கரகாட்டம், ஒயிலாட்டம், கர்நாடக இசை நிகழ்சசி நடைபெறுகிறது. இவற்றில் கலந்து கொள்ள விரும்புவோர் அமீரக தமிழ்ச் சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.
குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏதுவாக போக்குவரத்து வசதியை மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றம் துபாய் கிளை செய்து கொடுக்கிறது. போக்குவரத்து தொடர்பாக முரளி என்பவரை 050-7643555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications