நரையால் கண்ணாதாசனுடன் ஏற்பட்ட தொடர்பு: அகடவிகடம் அப்துல் காதர் துபாயில் பேச்சு
துபாய்: உலக நகைச்சுவையாளர் மன்ற துபாய் கிளையின் சார்பில் நகைச்சுவைத் திருவிழா 29.03.2013 அன்று மாலை ஆப்பிள் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது.
நகைச்சுவைத் திருவிழாவிற்கு உலக நகைச்சுவையாளர் மன்ற நிறுவனப் புரவலர் குணா தலைமை வகித்தார். தலைவர் முஹைதீன் பிச்சை வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது நகைச்சுவைத் திறன்களை சிறப்புற வெளிப்படுத்தியது குறித்து பெருமிதம் கொண்டார்.
முத்துக்கோதை, தண்ணீர்மலை, கடையநல்லூர் எஸ்.கே.எம். ஹபிபுல்லாஹ், முஹம்மது மஃரூப், சேஷாத்ரி, பாவை நியாஸ், பாலாஜி பாஸ்கரன், ஹுமைத், ஆயிஷா உள்ளிட்ட பலர் நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் அப்துல் காதர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், நிழல்படக் கலைஞர் இப்ராஹிம் உள்ளிட்டோருக்கு அப்துல் காதர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குணா, முஹைதீன் பிச்சை, அன்சாரி, கமலக்கண்ணன், சுல்தான், இத்ரீஸ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.