கொடியேற்றம், தேசப் பக்தி பாடல்கள்: குவைத்தில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
குவைத்: குவைத் இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 67வது சுதந்திர தினம் 15.08.2013 அன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
குவைத்துக்கான இந்திய தூதர் சதீஷ் சி. மேத்தா இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் உரையினை வாசித்தார்.
இந்திய தூதர் தனது உரையில், இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையேயான வரலாற்றுத் தொடர்புகளை நினைவு கூர்ந்தார். மேலும் குவைத் வளர்ச்சிக்கு இந்திய மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றார்.
அதனைத் தொடர்ந்து தேச பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பலவேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கொடியேற்றம்
மூவர்ணக் கொடியை சதீஷ் சி. மேத்தா ஏற்றும்போது எடுத்த படம்.

இந்திய மக்கள்
சுதந்திர தின கொண்டாட்டத்தில் திரளாக கலந்துகொண்ட இந்தியர்கள்.

உரை வாசிப்பு
தூதர் சதீஷ் குடியரசுத் தலைவரின் உரையை வாசிக்கிறார்.

பாடல்கள்
தேச பக்திப் பாடல்கள் பாடும் குழந்தைகள்.

வாழ்த்து
சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

பெரியோர்கள்
தேச பக்திப் பாடல்கள் பாடும் பெரியவர்கள்.












Click it and Unblock the Notifications