குவைத்தில் பெருநாள் சிறப்பு தொழுகை
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சிறப்பாக நடத்திய நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வருடமும் நடத்துகிறது.
ரம்ஜான் அன்று காலை 6 மணிக்கு K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் 6.30 வரை தக்பீர் முழக்கமும், 6.30 மணி முதல் 7.15 வரை சிறப்பு சொற்பொழிவும் நடக்கிறது.
தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் மூத்த ஆலிம் பெருந்தகை மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் ஆன்மீக அறிவொளி அ. முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் (நிறுவனர், முதல்வர், ஜாமிஆ மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரி, சென்னை) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
K-Tic துணை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் பெருநாள் தொழுகை விளக்க சிற்றுரை அளிப்பதோடு பெருநாள் தொழுகையை நடத்துகிறார். K-Tic பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள் பெருநாள் குத்பா பேருரை ஆற்றுகிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications