துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் இஃப்தார் நிகழ்ச்சி
துபாய்: துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 12.07.2013 அன்று மாலை லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
துவக்கமாக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சாதிக் இறைவசனங்களை ஓதினார். ஜமாஅத் தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஆலோசகர் சம்சுதீன் முன்னிலை வகித்தார்.
பொதுச் செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஜமாத்தின் சார்பில் தாயகத்தில் நடைபெற்று வரும் தனிப்பயிற்சி வகுப்பில் படித்த 10ம் வகுப்பு மாணாக்கர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற தகவலையும், 10க்கும் மேற்பட்டோர் 400க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற விபரத்தினையும் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் மௌலவி கலீல் ரஹ்மான் பிலாலிக்கு கனியின் தகப்பனார் நினைவுப் பரிசு வழங்கினார். மௌலவி கலீல் ரஹ்மான் தனது சிறப்புரையில், பொதுசேவையில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும், அப்பணிகளில் ஈடுபடுவோருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டியது குறித்தும் எடுத்துரைத்தார்.
பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை பொதுச்செயலாளர் ஹபிப் திவான் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications