For Daily Alerts
Just In
ஷார்ஜாவில் தமிழக சிறுவனின் முயற்சியில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி
ஷார்ஜா: ஷார்ஜாவில் தமிழக சிறுவனின் முயற்சியில் 29.07.2013 அன்று மாலை இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஷார்ஜா முனிசிபாலிட்டியின் ஒத்துழைப்புடன் பீஆ எனும் நகரை சுத்தப்படுத்தி வரும் நிறுவன தொழிலாளர் முகாமில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தைச் சேர்ந்த அபுபக்கர் அவர்களின் மகன் ஹுமைத் அபுபக்கர் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நோன்பு திறப்பதற்குரிய உணவுப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஷார்ஜா முனிசிபாலிட்டி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
ஹுமைத் ஷார்ஜா பள்ளியில் பயின்று வருகிறார். கிரீன் குளோப் என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இப்பணிக்கு பல்வேறு சமூக நல ஆர்வலர்களும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.
Comments
English summary
TN based student Humaidh threw an iftar party in Sharjah on july 29.