தூக்கம் வராம தவிக்கிறீங்களா... ஜாலியாக 'அந்த விளையாட்டை' விளையாடுங்களேன்!
உணவும் உறக்கமும் மனிதர்களுக்கு இன்றியமையாதது. பசிக்கு வயிறு நிறைய உண்பவர்கள் கூட உறக்கம் வராமல் தவிப்பார்கள். உறக்கத்தை தொலைத்தவர்களுக்கு யோகா, ஷவர் குளியல், உடலுறவு போன்றவை நல்ல உறக்கத்தை தரும் அருமருந்தாக திகழ்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் மூலம் தெரியவந்துள்ளது.
யோகா, தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கும். இதன் மூலம் அமைதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் உடல் சூடு காரணமாகவும் உறக்கம் வராமல் தவிப்பவர்கள் ஷவரில் நன்றாக குளிப்பதன் மூலம் உறக்கம் கண்களைத் தழுவுமாம்.
குற்றால அருவியில் இரவு பத்து மணிக்கு மேல் குளித்தவர்களுக்கு இந்த அனுபவப்பூர்வமான உண்மை தெரியும். தலையில் மோதி விழும் அருவி நீரில் குளித்து விட்டது. சுடச் சுட சாப்பிட்டு விட்டு உறங்கினால் காலை 8 மணி வரைக்கும் தூக்கம் கண்களை அசத்தும் அதைத்தான் இந்த ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்.

யோகா மூன்று வித நன்மைகள்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்கூல் ஆப் மெடிடேசன் மற்றும் யோகா நிறுவனத்தினர் யோகாவினால் மனிதர்களுக்கு உடல், மனம், ஆன்மீக ரீதியான நன்மைகள் ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

மன அழுத்தம் குறையும்
யோகா மூலம் மன அழுத்தம் ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால் மனம் அமைதியடைகிறது.

நரம்புகள் சீராகும்
யோகவினால் தசைகள் வலுவடையும், மனபலத்தோடு உடல்பலம் அதிகமாகும். நரம்பு மண்டலங்களில் பிரச்சினைகள் சிக்கல்கள் இருந்தாலும் தீர்வு கிடைக்கும். தூக்கக் குறைபாடு நீங்கும். எனவே இரவு நேரங்களில் யோகா செய்வது பலவித நன்மைகளை தருகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

உடல் குளுமை அடையும்
ஷவரில் நன்றாக நனைந்து குளிப்பதன் மூலம் தலையிலும், உடலிலும், குளுமை பரவி நன்றாக தூக்கம் வரும். எனவே இரவு நேரத்தில் நன்றாக குளித்துவிட்டு உறங்குங்கள் என்பது நிபுணர்கள் அறிவுரை.

உறக்கம் தரும் செக்ஸ்
தம்பதியர் மனமொத்து உறவில் ஈடுபடுவதன் மூலம் சுரக்கும் ஹார்மோன்கள் நன்றாக உறக்கத்தை தரும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications