ஜோதிடமும் அறிவியலே... மதுரை சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மைய பட்டமளிப்பு விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், மதுரை சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்தி வரும் ஜோதிட படிப்புகளுக்கான பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றத
சென்னை: மதுரையில் உள்ள சப்தரிஷி ஜோதிட அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஜோதிடம் பற்றிய பட்டம், பட்டய படிப்புகளை அளித்து வருகின்றன. பி.ஏ., எம்.ஏ., ஜோதிடவியல், டிப்ளமோ ஜோதிடவியல், டிப்ளமோ வாஸ்து போன்ற படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.
2014 - 2016ஆம் ஆண்டு எம்.ஏ படித்தவர்கள், டிப்ளமோ படித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா கடந்த 25ஆம் தேதி சென்னையில் உள்ள மூலக்கடை வியாபாரிகள் சங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. சகிலா சுப்ரமணியன், குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தார். ஜெயலட்சுமி சுப்ரமணியன் கடவுள் வாழ்த்து பாடினார்.

ஜோதிட பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் அ. நவநீத கிருஷ்ணன், பங்கேற்று ஜோதிட கலை வல்லுனர்களுக்கு பதக்கங்களை வழங்கி, பட்டம் அளித்தார். ஜோதிட பேராசான் கே.ஆர். சுப்ரமணியன், தனது மாணவர்களுக்கு "ஜோதிட வாசஸ்பதி" எனும் சிறப்பு பட்டம் மற்றும் கேடயத்தை அளித்தார்.
விழாவில் பங்கேற்ற ஆசிரியர்கள், பி.ஆறுமுகம், கே. சந்தான ராஜசேகரன் ஆகியோர் ஜோதிடத்தில் பிரசன்னம் பற்றி பேசி விளக்கம் அளித்தனர்.
பாதகாதிபதியும் நன்மையே செய்வார் என்று எம்.செந்தில்நாதன் பேசினார். ஜாதக கட்டத்தில் லக்னத்திற்கு ஏற்ப பாதகாதிபதி பலன்களை கொடுப்பார். எந்த ராசிக்கு எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்றும், சர, ஸ்திர, உபய ராசிகளில் நீர், நிலம், நெருப்பு, காற்று ராசிகளில் பாதகாதிபதிகள் அமர்ந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்றும் ஜோதிட ஆசான் செந்தில்நாதன் பேசினார்.

இதே போல விழாவில் பேசிய பி. மாணிக்கவாசகம், கர்மா பற்றி பேசினார். ஜோதிடம், கடவுள் எந்த அளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை உதாரணங்களுடன் விளக்கினார்.
அதிமுக ராஜ்யசபா எம்.பி., அ. நவநீதகிருஷ்ணன், ஜோதிடவியல் மாணவர்களுக்கு சிறப்பு பட்டங்களையும் கேடயங்களையும் வழங்கி வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications