தேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார், சபரிநாதனுக்கு யுவ பிரஸ்கார் விருதுகள் அறிவிப்பு
சென்னை: குழந்தைகள் இலக்கிய துறைக்கு அளித்த பங்களிப்பிற்காக, எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாதெமியின் 2019-ஆம் ஆண்டு பால, யுவ புரஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.. யுவ புரஸ்கார் விருதுக்கு கவிஞர் சபரிநாதன் எழுதிய வால் கவிதைத் தொகுப்பும், குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்கு தேவி நாச்சியப்பனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சாகித்திய அகாடமி விருது என்பது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, மத்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.
இதற்கான பரிசுத்தொகையாக ரூ.1 லட்சம் மற்றும் ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இதுபோல் இளம் படைப்பாளிகளுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான இளம் படைப்பாளி, யுவபுரஸ்கார் விருது, 'வால்' என்ற கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு 29 வயதுதான் ஆகிறது என்பது கவனிக்கத்தக்கது. கவிதையையும் விமர்சனத்தையும் மொழிபெயர்ப்புகளையும் செய்துவருபவர் சபரிநாதன்.
'களம் காலம் ஆட்டம்', 'வால்' ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும் இவருக்கு எழுத்துலகத்தில் புகழ் சேர்த்தவையாகும். இதேபோல, ஸ்கான்டிநேவியக் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் எழுதிய கவிதைகளை உறைபனிக்குக் கீழே என்ற தலைப்பில் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
குழந்தைகள் இலக்கிய துறையில் அரிய பங்களிப்பு வழங்கியதற்காக, தேவி நாச்சியப்பனுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications