ஏப்ரல் 11ம் தேதி துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு அமீரக சுகாதாரத் துறையுடன் இணைந்து ரத்ததான முகாமினை 11.04.2014 அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அஸ்கான் ஹவுஸில் நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
ரத்ததானம் செய்ய விரும்புவோர்:
* 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
* ஏற்கனவே ரத்ததானம் செய்து இரண்டரை மாதங்களுக்கு மேற்பட்டு இருக்க வேண்டும்
* எமிரேட்ஸ் ஐ.டி., டிரைவிங் லைசன்ஸ், லேபர் கார்டு அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும்
ரத்ததானம் செய்வதால் நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று அஞ்சத் தேவையில்லை. ரத்ததானம் செய்வது நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்றும் உடலில் தானாகவே 48 மணிநேரத்தில் அதே அளவு ரத்தம் உற்பத்தியாகிவிடும் என்றும் மருத்துவகுறிப்புகள் தெரிவிக்கின்றன.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை கீழ் கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கீழை ஹமீது யாசின் : 052 777 8341
முதுவை ஹிதாயத் : 050 51 96 433
திண்டுக்கல் ஜமால் முஹைதீன் : 055 800 79 09
அஞ்சுகோட்டை அப்துல் ரசாக் : 055 41 45 068
பூதமங்கலம் முஹைதீன் : 055 65 89 305
அல்லது
எனும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.