31ம் தேதி துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்
துபாய்: துபாய் ஈமான் கல்சுரல் செண்டர், துபை ஹெல்த் அத்தாரிட்டியுடன் இணைந்து 31.10.2014 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அல் கிஸஸ் சோனாப்பூர் பவர் செக்யூரிட்டி கேம்பில் ரத்ததான முகாமை நடத்துகிறது.
இந்த முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்ய விரும்புவோர்,
* 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்
* ஏற்கனவே ரத்ததானம் செய்து இரண்டரை மாதங்களுக்கு மேற்பட்டு இருக்க வேண்டும்
* எமிரேட்ஸ் ஐடி, டிரைவிங் லைசன்ஸ், லேபர் கார்டு அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வரவேண்டும்

ரத்ததானம் செய்வதால் நமக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று அஞ்சத் தேவையில்லை. ரத்ததானம் செய்வது நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்றும் உடலில் தானாகவே 48 மணிநேரத்தில் அதே அளவு ரத்தம் உற்பத்தியாகிவிடுவதாக மருத்துவக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்களைப் பற்றிய விபரங்களை கீழக்கண்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணையத்தில் நேரடியாகவும் பதிவு செய்யலாம்.
http://imandubai.com/iman/?page_id=2186
அல்லது
கீழை ஹமீது யாசின் : 052 777 8341
முதுவை ஹிதாயத் : 050 51 96 433
ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது வருகையினை பதிவு செய்யலாம்.












Click it and Unblock the Notifications