For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி 04.07.2014 அன்று மாலை ஷார்ஜா அபுசகாராவில் உள்ள கிராண்ட் எக்ஸெல்சியர் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமீரகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 250க்கும் அதிகமான தோப்புத்துறைக்காரர்கள் மற்றும் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு புனித ரமலானின் வாழ்த்துக்களையும், மகிழ்வையும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்

எம். அபுல் ஹசன் அவர்கள் திருமறை வசனங்களை மொழிந்து நிகழ்ச்சியை துவைக்கி வைத்தார். சங்கத்தின் செயலாளர் ஆதம் ஆரிப் முன்மொழிந்திட, ஜே.பி. ஜமால் மொய்தீன் வரவேற்புரை நல்கி தொகுத்து வழங்கினார்.

சங்கத்தின் தலைவர் ஹெச். பசுல் ஹக் முன்னுரை வழங்கி தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தித் தந்தார்.

அமீரக இஸ்லாமிய அழைப்பாளர் கீழை ஜமீல் முஹமது இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார் அவருக்கு நினைவுப் பரிசை ஒய்.ஏ. கரீம் வழங்கினார்.

Dubai Thopputhurai Muslim Sangam's Iftar party

சிறப்பு விருந்தினராக கோவை ஐக்கிய சகோதரத்துவப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் நந்தகுமார் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், இஸ்லாமியர்களின் தேசப்பற்றினை பாராட்டினார். கடல் கடந்து வாழ்ந்தாலும் தங்களது ஊரினை மறவாது அந்த ஊரின் வளர்ச்சிக்கு அரிய பல திட்டங்களை நிறைவேற்றி வரும் தோப்புத்துறைக்காரர்களை பாராட்டினார். அவருக்கு நினைவுப் பரிசை எஸ். பஷீர் அகமது வழங்கினார்,

எம். ஜே. அவுலியா முகம்மது நன்றி கூற இஃப்தார் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

English summary
Dubai Thopputhurai Muslim Sangam's annual iftar party was held at Grand Excelsior hotel in Sharjah on july 4th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X