Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - அத்தியாயம் 4

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 4வது அத்தியாயம் இது.

Subscribe to Oneindia Tamil

- லதா சரவணன்

"மீண்டும் ஒருமுறை போன் வந்திருக்கு ஸார்... வேற நம்பர் ஆனா சிக்னல் மட்டும் திருவான்மியூர்ல இருந்துதான்,,,,,!"

"டிரைவர் கண் திறந்திட்டாரா? ஏதாவது விசாரிச்சீங்களா?"

"மயக்கம் தெளிஞ்சிடுச்சு டாக்டர் ட்ரீட் பண்றார். அதனால விசாரிக்க முடியலை" பேசியபடியே இருவரும் உள்ளே நுழைய எதிர்ப்பட்ட டாக்டாரிடம், "எப்படி இருக்கான் டாக்டர்?"

Kakithapookkal - Part 4

"பெட்டர்."

"விசாரிக்கலாமா?"

"தாராளமா?" அவர் வெளியேற,

"வணக்கம் ஸார்...!" டிரைவர் கைகூப்பினான். காலில் முதுகில் நல்ல அடி, தொட்டிலாய் கட்டிய கையோடு இருந்தான்

"காசி....!"

"நீங்கதான் ஜீவனை தினமும் ஸ்கூலில் கொண்டுபோய் விடறது. என்னாச்சு ?"

"ஸார். நானும் குழந்தையும் கிளாஸ் முடிச்சிட்டு வரும் வழியில் எப்பவும் பழரசம் குடிப்பது வழக்கம்... அதேபோல இன்று காரை நிறுத்தும் போதே யாரோ இரண்டு பேர் வம்பு சண்டை போட்டுகிட்டு இருந்தாங்க. நான் சுதாரிப்பதற்குள் எங்க வண்டியை விரட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. அப்போதான் விபத்து ஏற்பட்டுடுச்சு.. அதுக்குப்பிறகு என்ன நடந்ததுன்னு புரியலை. கண்விழிச்சி பார்த்தப்போ இங்கே இருக்கேன்... ஸார் ஜீவனுக்கு ஒண்ணும் ஆயிடலையே?"

"நத்திங்....உங்ககிட்டே சண்டை போட்ட ஆளுங்க எப்படி இருந்தாங்கன்னு தெரியுமா?"

"மாநிறம், ஒருத்தன் உயரமா இருந்தான், ஒருத்தன் குள்ளமா பருமனா இருந்தான். நெற்றியில் பெரிய வடு இருந்தது... ஆ,,,அப்புறம் அவங்க சண்டைபோட்டப்போ என்னைப்பத்தி கோட்டின்னு சொன்ன ஞாபகம்....?!"

"சரி... ரெஸ்ட் எடுங்க காசி"

Kakithapookkal - Part 4

"சார் பச்சைப்பிள்ளை ஸார்.! அவனுக்கு.....!பேசும்போதே காசியின் கண்கள் கலங்கின...."!

ஈஸ்வர் அவன் தோளைத்தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேற, துரை அருகில் வந்தான். "ஸார் டிரைவர் சொல்றதெல்லாம்....!"?

"உண்மைதான்... துரை அவன் வார்த்தையிலும், கண்களிலும் உண்மையான வருத்தம் இருந்தது.. சரி போன் வந்தது திருவான்மியூர்... காசி சொன்ன வார்த்தையில் கோட்டின்னு ஒரு பேரு வருது. முதல்ல ஸ்டேஷனுக்கு போன் பண்ணி அந்த பெயர்லே யாராவது ரெளடி இருக்கானான்ன கேளுங்க...!"

சற்று நேரத்திற்குள் தகவல் வரவும், ஈஸ்வர் கவினுக்கு போனில் ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தான்.. "என்னாச்சு?"

"கோட்டி பாஸ்கர் போனமுறை அடையார் திருட்டு வழக்கில் ஜாமீன் வாங்கிப்போனவன்"

"அவன் இடம் தெரியுமா?"

"தெரியும்... !"

"வண்டியை அங்கே விடுங்க.... துரை நெரிலேயே போய் பார்த்திடலாம்...!" வண்டி பீறிட்டு கிளம்பியது.. புழுதியைச் சுமந்தபடி செல்லும் போலீஸ் ஜீப்பினைக் கண்டு சிலர் பதுங்கிட சிலர் பயந்து வழிவிட அந்த கூரை வேய்ந்த வீட்டின் முன் நின்றது ஜீப்,,,, அதற்குள் பதறியபடி வெளியே வந்த கோட்டி பாஸ்கர்...

"என்ன சாமி! நான்தான் கரெக்டா வந்து கையெழுத்தெல்லாம் போடறேனே ?"

"இது வேற பிரச்சனை ? சாரோட நண்பர் குழந்தையை கடத்திட்டு போய் இருக்காங்க?" "உங்க ஏரியா ஆளுங்கதான்... உனக்கு ஏதாவது ....!"

"அய்யா,,,, எனக்குப்புள்ளைங்க இல்லே சாமி.... கஞ்சா,,, கள்ளசாராயம், ஏன் கொலை கூட செய்து இருக்கேன். ஆனா பச்சைப்பிள்ளையை கடத்திட்டுபோய் கொடுமை செய்ய மாட்டேங்க... நம்புங்கய்யா?"

"இதோ பாரு கோட்டி, உனக்கு யார் மேலாவது....!"

"அப்படியெல்லாம் இல்லேங்க?"

"கோட்டி கடத்திட்டுப்போனவன் பேச்சு வாக்கிலே உன் பேரைத் தான் சொல்லி இருக்கான் அதுக்கு சாட்சி இருக்கு,,, நீ இப்போ தப்பிக்க முடியாது.. மரியாதையா
உண்மையை சொல்லிடு இல்லேன்னா... முட்டி பேந்திடும்.?!"

"அய்யா.. நான் ... எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லேங்க.. ஆனா யார் செய்து இருப்பாங்கன்னு தெரியும்...!"

"யாரு?"

"நம்ம பிச்சுவா வேலு ஸார்.. அவன்தான் முன்பு நாங்க கூட்டா தொழில் செய்தப்போ நம்ம தெருமுனை அய்யர் புள்ளையை கடத்திட்டான் .. அதிலேதான் எங்களுக்குள்ளே பிரச்சனையே வந்தது."

"நீ பொய் சொல்லலையே? இல்லை என்பதுபோல் தலையசைத்தான்.. சரி அவன் எப்படி இருப்பான்..?"

கோட்டி சொன்ன அடையாளமும் காசி சொன்ன அடையாளமும் ஒத்துப்போக "அவன் இப்போ எங்கே இருப்பான்னு தெரியுமா? என்றான் உக்கிரமாய் ஈஸ்வர்.

(தொடரும்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+