டொரன்டோவில் தமிழ் இருக்கை...நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் ஓவியா ஸ்ரீதரன்
டொரன்டோ : டொரன்டோவில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக முயற்சியில் கனடிய தமிழ் பேரவை இறங்கி உள்ளது. இதற்காக இணைய வழியிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
டொரன்டோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்ச்சியாக ஓவியா ஸ்ரீதரனின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி பிப்ரவரி 21 முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 12:30 வரை இணைய வழியாக இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உன்னதமான வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் இருக்கைச் செயல் திட்டத்திற்கு அனைவரும் தங்களின் மேலான ஆதரவை நல்குமாறு கனடிய தமிழ் பேரவையில் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
டொரன்டோ பல்கலைக்கழக ஸ்காபரோவில் அமையவிருக்கும் தமிழ் இருக்கையானது, தமிழ்க் கற்கை நெறியை வளப்படுத்துவதோடு, தமிழ் மொழிக்கான அடையாளத்தை உலக அரங்கில் மேம்படுத்தும்.
டொரன்டோ தமிழ் இருக்கை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.torontotamilchair.ca என்ற இணையத்தளம் அல்லது (416) 707-9104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.