அபுதாபியில் நடந்த மீலாது நபி விழா
அபுதாபி: அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் கடந்த 30.01.2014 அன்று (ஹிஜ்ரி 1435, ரபியுல் அவ்வல் - பிறை 29) இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் இஷா தொழுகைக்கு பின் மீலாது நபி விழா நடைபெற்றது.
ஜமாஅத்தின் தலைவர் எம். ஷூஐபுதீன் தலைமை வகித்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஜமாஅத் முன்னாள் தலைவர் ஹாஜி டி.ஏ. முஹம்மது ஹஸன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியின் துவக்கமாக கிராஅத்தினை உடுமலைப்பேட்டை மௌலானா மௌலவி இப்ராஹிம் ரஷாதி அவர்கள் ஓதினார், ஜமாஅத்தின் துணைத் தலைவர் ஏ.ஆர். இஸ்மத்துல்லாஹ் வரவேற்றுப் பேசினார்.

காயல்- மௌலானா மௌலவி ஹுஸைன் மக்கீ ஆலிம் மஹ்லரி (மீலாது விழாக்களை ஏன் நடத்த வேண்டும் என்பது குறித்தும்), மௌலவி எம். முஹம்மது அய்யூப் (அல்ஜமா இஸ்லாமிக் பைத்துல்மால், ஜமாஅத் ஒற்றுமை குறித்தும்), பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிறுவனர் ஹமீது ஹாஜியார் அவர்கள் (மீலாது விழாக்களால் சிறப்பு, லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சிகளை அபுதாபியில் அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்து செய்வதன் சிறப்பு பற்றியும்), ஆவை முஹம்மது அன்சாரி அவர்கள் (அபுதாபியில் உள்ள எல்லா ஊர் ஜமாஅத்துகளும் ஒன்றிணைந்து புதிய கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதன் சிறப்பு பற்றியும்) வாழ்த்துரைகளை வழங்கினார்கள். ஜமாஅத்தின் துணைப் பொருளாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்கள் (ஜமாஅத்தின் நிலைபாடு, ஒற்றுமை பற்றியும்), ஜமாஅத்தின் தலைவர் எம். ஷூஐபுதீன் அவர்கள் (அல்லாஹ் வழங்கி உள்ள நிஃயமத்துகளை பிறருக்கு கொடுப்பதன் சிறப்பு பற்றியும்) உறை நிகழ்த்தினார்கள்.

பின்பு அழைப்பை ஏற்று வருகை புரிந்திருந்த கௌரவ விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை புரிந்த லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிள் அல்ஹாஜ் எம். முஹம்மது காஸிம் பாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் (பெருமானார் ஸல்... அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் ஒற்றுமை, ஐக்கியம், விட்டு கொடுத்தல், இபாதத் குறித்து) மிகத் தெளிவான சிறப்பு பயான் செய்தார்.

நன்றி உறையினை ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ. ரபி அஹமது அவர்கள் கூற, ஹஜ்ரத் அவர்களின் துஆவுக்குப்பின் அணைவருக்கும் சீரணி உணவு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினர்களாக அய்மானின் பொருளாளர் அல்ஹாஜ் ஜமாலுதீன் அவர்களும், இந்திய முஸ்லிம் பேரவை (IMF) தலைவர் அல்ஹாஜ் அப்துல் காதர் அவர்களும் வருகை புரிந்திருந்து சிறப்பித்தார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications