நாளை ஷார்ஜாவில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டம்
ஷார்ஜா: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் கூட்டம் ஷார்ஜாவில் நாளை (15ம் தேதி) நடைபெறுகிறது.
இந்த கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடக்கிறது. இம்முன்னாள் மாணவர் கூட்டங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு இக்கூட்டம் அதிகச் சிறப்பாகவே நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கல்லூரியில் படித்த சுமார் 120 மாணவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை மற்றும் சுயதொழில் செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்திற்காக சிறப்பு விருந்தினர்களாக இந்தியாவில் இருந்து விருந்தினர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிகழ்ச்சி ஷார்ஜாவில் உள்ள "வெரோனா ரிசார்ட்"டில் வைத்து நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தைப் பற்றி மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் : 050 1487910 / 056 173 3493












Click it and Unblock the Notifications