சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் களைகட்டிய 11ஆம் ஆண்டு பொங்கல் விழா

சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் பொங்கல் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.

Subscribe to Oneindia Tamil

புக்கிட்: சிங்கபூர் புக்கிட் பாஞ்சாங்கில் 11-ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் எழுச்சியுடன் நடைபெற்றது.

உலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு.

தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்புக்குரிய விழா கடந்த 21.1.18 ஞாயிறு அன்று சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்,பெண்டிங் LRT அருகிலுள்ள திறந்தவெளி அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.

 டாக்டர் தியோ ஹோ பின் பங்கேற்பு

டாக்டர் தியோ ஹோ பின் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், வடமேற்கு மாவட்ட மேயருமான டாக்டர் தியோ ஹோ பின் கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாவின் சிறப்பு அம்சமாக,சிங்கப்பூர் சாதனை முயற்சியாக சீன மலாய்காரர்களின் நமது பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிவகுப்பு நடைபெற்றது.

 கிராமிய கலை நிகழ்ச்சிகள்

கிராமிய கலை நிகழ்ச்சிகள்

அத்துடன் சிங்கப்பூர் புகழ் மணிமாறன் குழுவினரின் இசை,நடனம்,கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் கிராமிய பாடல்கள் அடங்கிய கலை நிகழ்ச்சியுடன் கிராமிய சூழ்நிலையில் பொங்கல் விழா நடைபெற்றது. 11வது ஆண்டாக நடைபெறும் இந்த பொங்கல் விழாவில், இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவான பரோட்டா செய்முறை விளக்கம் காண்பதோடு, அனைத்து இனத்தவரும் ஒரே நேரத்தில் பங்குகொண்டு பரோட்டா செய்யும் காட்சி இடம்பெற்றது என்று பெ மூர்த்தி PBM ஏற்பாட்டுக்குழு தலைவர் கூறினார்.

 சிந்தனை உரை

சிந்தனை உரை

மேலும் விழாவை மெருகூட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளை கண்டு மகிழந்தனர். பொங்கல் விழாவின் சிறப்பு அம்சமாக ஜோதி மாணிக்கவாசகத்தின் சிந்தனையை தூண்டும் தமிழர் திருநாள் சிறப்புரை இடம்பெற்றது. பலதரப்பு மக்களும் குடும்பத்தோடு கலந்துகொண்டு இந்த பொங்கல் விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடதக்கது

 எழுச்சி விழா

எழுச்சி விழா

இவ்விழாவினை புக்கிட் பாஞ்சாங் CC ஏற்ப்பாடு குழுவுடன் இணைத்து லிஷா, அரசகேசரி சிவன் கோவில், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்) சிறப்பாக செய்த்திருந்தனர். மிகவும் எழுச்சியுடன் இந்த பொங்கல் விழா நடைபெற்றது.

செய்தி வெளியீடு - கார்த்திகேயன் நடராஜன், சிங்கப்பூர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+