துபாயில் சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் குழு கலாச்சார சுற்றுப்பயணம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய்க்கு வந்த சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினருக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 28.02.2014 அன்று மாலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூர் கஸ்டம்ஸ் கிரெடிட் கோ ஆபரேட்டிவ் சேர்மன் கிருஷ்ணன், சிங்கப்பூர் அரசுப் பணியாளர் கிரெடிட் கோ ஆபரேட்டிவ் சேர்மன் ஜான் ராகவன், கஸ்டம்ஸ் கிரெடிட் கோ ஆபரேட்டிவ் சங்க பொருளாளர் முதுவை ஃபரீஹுல்லா உள்ளிட்டோர் கொண்ட 28 பேர் குழு துபாய் வந்தது.

துபாயில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் குழுவினர் துபாய் அருங்காட்சியகம், ஃபுர்ஜ் கலீஃபா, அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசல், பாலைவனப் பயணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல உள்ளனர்.
அமீரகத்தின் சூழல் தங்களை வெகுவாகக் கவர்ந்த காரணத்தால் இப்பயணத்தை மேற்கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டினர் எனக் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications