நாளை ஷார்ஜாவில் முனைவர் மன்சூருடன் மனம் விட்டுப் பேச கல கல சி(ரி)றப்பு நிகழ்ச்சி
ஷார்ஜா: நாளை ஷார்ஜாவில் முனைவர் பேராசிரியர் கம்பம் பீ.மு. மன்சூர் அவர்களுடன் மனம் விட்டுப் பேச என்ற சி(ரி)றப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், இலக்கிய ஆர்வலரும், மாணவக் கண்மணிகளின் நட்பின் சிகரமாக விளங்கி வரும் முனைவர் பேராசிரியர் கம்பம் பீ.மு. மன்சூர் அவர்களுடன் மனம் விட்டுப் பேச என்ற சி(ரி)றப்பு நிகழ்ச்சி சிகாகோ கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சி 23.01.2016 சனிக்கிழமை மாலை சரியாக 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் சார்ஜா மன்னர் பைசல் சாலையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெயர்களை முன்பதிவு செய்ய 050 - 51 96 433 / 055 - 41 45 068 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications