Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரதிதாசனின் நிறைவேறாத 3 ஆசைகள்: அஜ்மான் முத்தமிழ் இலக்கிய நிகழ்வில் முனைவர் மன்சூர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

அஜ்மான்: கடந்த 7ம் தேதி அன்று அஜ்மான் சிவ ஸ்டார் பவனில் இரவு 9.00 மணியளவில் முத்தமிழ் மழை நிகழ்வும், கவிஞர் காவிரிமைந்தன் பிறந்த நாள் விழாவும் இனிதே நடைபெற்றன.

செல்வி ஆனிஷாவின் தமிழ்த் தாய் வாழ்த்தோடு விழா தொடங்கியது. விழாவிற்கு ஈ.டி.ஏ நிறுவனத்தின் மூத்த செயல் இயக்குனர் திரு. அன்வர் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார். தனக்கே உரித்தான பாணியில் தமிழ் அருவிபோல் சொற்களைக் குவித்து சொல்லோட்டம் நடத்தினார். கவிஞர் காவிரிமைந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அளவான வார்த்தைகளால் அலங்காரம் செய்து விழாவைத் தொகுத்தளித்தார் திண்டுக்கல் ஜமால் அவர்கள். திரு. ஏ. என். சொக்கலிங்கம், திருவிடச்சேரி எஸ். எம். பாரூக் அவர்களும் வாழ்த்துரை வழங்கிட திருமதி நர்கீஸ் பானு அவர்கள் காவிரிமைந்தன் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை வாசித்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடியில் இருந்து கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்களும், மதுரையில் இருந்து மனிதத் தேனீ சொக்கலிங்கம் அவர்களும், கம்பத்திலிருந்து பேராசிரியர் மன்சூர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

விழாவில் தலைமை ஏற்ற அன்வர் பாஷா அவர்களுக்கு ஏ என். சொக்கலிங்கம் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். சொக்கலிங்கம் அவர்களுக்கு கவிஞர் காவிரிமைந்தன் பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசை திருமதி வள்ளி அழகப்பன் வழங்கினார். பேராசிரியர் மன்சூர் அவர்களுக்கு கவிஞர் ஜியாவுதீன் பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசை கவிஞர் ரமணி வழங்கினார். பழனியப்பன் அவர்களுக்கு நிஜாம் பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசை முதுவை ஹிதாயத் வழங்கினார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய கவியரசு கண்ணதாசன் பாடல்கள் காலத்தின் பதிவுகள் நூல்.. அழகப்பன், ஹிதாயத்துல்லா மற்றும் யூசுப் ஆகியோரால் வழங்கப்பட்டது.

உலகத்தின் தொன்மை மிகுந்த உயிர்ப்புள்ள நகரங்களில் அன்றும் இன்றும் முதன்மை வகிக்கும் மதுரையில் இருந்து 15500 நிகழ்ச்சிகளுக்கு மேலாக பங்கேற்று சிறப்புரை, தலைமையுரை ஆற்றிய கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத் தேனீ சொக்கலிங்கம் தனது இயல்பான பேச்சால் இதயங்களைக் கவர்ந்தார். நகைச்சுவையோடு பல்வேறு தகவல்களை அள்ளிக் கொடுத்ததோடு வாழுகின்ற மண்ணின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நீங்கள் வாழ்வதும், அயலக மண்ணில் தமிழை போற்றி வருவதும் பாராட்டுக்குரியவை என்றார்.

பழ. பழனியப்பன் அவர்கள், அகமும் முகமும் தமிழால் நிரம்ப கம்பனில் தோய்ந்த காரணத்தால் இன்பத்தமிழ் நுகர கம்பனைப் பற்றியும் கம்ப ராமாயணம் பற்றியும் நுணுக்கமான பல தகவல்களைப் பகிர்ந்தார். பழமையின் பெருமைகள் உட்கொண்டு எதிர்காலம் நோக்கிய சிந்தனையோடு தற்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் இருப்பதால் காலத்தை வென்று நிற்கும் காவியமாய் கம்பனின் படைப்பு காலத்தை வென்று நிற்கிறது என்றார்.

Tamil Literary programme held in Ajman

கம்பம் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்கள் தமது சிறப்புரையில், தன்னை கவர்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைப்புகள் மிகச் சரியாக பதியப்படவில்லை என்றார். மேலும் பாரதிதாசனின் மூன்று ஆசைகள் - ஒரு முறை விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், பாரதி பற்றி ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்றும், மாபெரும் நூலகம் ஒன்றை உருவாக்கவும் ஆசைப்பட்டார். அவை நிறைவேறாமலே உயிர் நீத்தார்.

அவர் இறந்தபோது அவர்தம் உடலை புதுவை எடுத்துச் செல்லக் கூட வசதியில்லை. இன்றோ அவர் பெயரில் பல்கலைக்கழகம் இருக்கிறது. பல்லாயிரம் தமிழ்ச் சான்றோர்கள் அதில் உருவாக்கப்படுகின்றனர் என்று உருக்கமுடன் குறிப்பிட்டு வாழும்போது கவிஞர்களை தமிழ்ச் சமுதாயம் போற்றிடக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

கவிஞர் ரமணி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிவ ஸ்டார் கோவிந்தராஜ், கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் ஜியாவுதீன், திருவிடச்சேரி எஸ். எம். பாரூக், முதுவை ஹிதாயத், திண்டுக்கல் ஜமால், ஜெயராமன் ஆனந்தி, கவிஞர் ரமணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+