30ம் தேதி குவைத்தில் அழைப்பியல் பயிற்சி முகாம்
குவைத்: குவை தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் அழைப்பியல்(தஃவா) பயிற்சி முகாம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(கே-டிக்) நடத்தும் அழைப்பியல் பயிற்சி முகாம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. குவைத்தில் உள்ள கே-டிக் குத்பா பள்ளிவாசலில் முகாம் நடைபெறுகிறது.
ஜும்ஆ தொழுகைக்கு பிறகு துவங்கும் நிகழ்ச்சிக்கு கே-டிக் தலைவர் மவ்லவி அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீஹராஷா ஃபாஜில் பாகவீ தலைமை தாங்குகிறார்.

சமூக ஆர்வலரும், இஸ்லாமிய அழைப்பாளருமான ஆலி ஜனாப் கே. அப்துர் ரப் ஆஜாத் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார். அழைப்புப் பணி... ஏன்? எவ்வாறு? எங்கே? என்ற தலைப்பில் அவர் பேசுகிறார்.
கே-டிக் துணை தலைவர் மவ்லவி எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ அவர்கள் ஜும்ஆ குத்பா பேருரையை நிகழ்த்துகிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications