11ம் தேதி துபாயில் 'உணர்வாய் உன்னை' பயிற்சி முகாம்
துபாய்: உணர்வாய் உன்னை என்ற ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வரும் 11-ம் தேதி மதியம் 2.45 மணி முதல் இரவு 9.00 மணி வரை துபாய் முஹைஸ்னா பகுதியில் உள்ள பட்ஸ் பப்பளிக் ஸ்கூல் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே அபுதாபி, துபாய், ஷார்ஜா, ரியாத், தம்மாம், சிங்கப்பூர், குவைத், பஹ்ரைன், மஸ்கட் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பயிற்சி முகாம் மீண்டும் துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் ஹுசைன் பாஷா அவர்கள் பயிற்சி அளிக்கிறார்.
முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 055 8622770, 050 9595216, 050 2933713 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சி குறிப்பேடுகள், கையேடு மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications