ஷார்ஜாவில் நடைபெற்ற வாக்கத்தான் 2014: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: உலக பூமி தினத்தை முன்னிட்டு ஷார்ஜாவில் நடையோட்டம் நடைபெற்றது.
ஷார்ஜாவில் பூமி தினம் 2014ஐ நினைவு கூறும் விதமாக 22.04.2014 அன்று மாலை ஷார்ஜா கஸ்பாவில் நடையோட்டம்(வாக்கத்தான்) நடைபெற்றது.

மூன்று கிலோ மீட்டர் நடைபெற்ற நடையோட்டத்தில் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவியரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கானோர் இந்த நடையோட்டத்தில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வண்ணம் இந்த நடையோட்டம் வருடந்தோறும் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையொட்டி குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.













Click it and Unblock the Notifications