பிரகடனம்- ஆதவன் தீட்சண்யா
கற்சங்கிலி அழுந்தி
வடுகாய்த்த கணு-வலும்பும்
முறிந்த மணிக்கட்டும்
-நாறுங்கிய கபாலமுமாக
கடைக்காலில் கண்-டடுெத்தது
முப்பாட்டன் கூடாயிருக்கும்
சாணிப்பால் குடித்ததும்
சவுக்கடி பட்டதற்குமான சாட்சியங்கள்
மக்கி மறைந்திருக்கும் மண்ணோடு
அதீத பயமோடி புடைத்து
வெடித்த நாளங்களும்
பலவந்தமாய்
தோண்டி-யெடுக்கப்பட்டு
மண்து-ர்ந்த மூளையிடமும் கூடி
அப்பனுடையது -
கொழுமுனையில் சிக்கியது
நானும் புதையுற மனமற்று
அசைத்த சிறகுரசி
சிறையாய்க் கவிந்த
வானம் கிழிவதை
போராட்டம் கலக-மன்றன
புனித ரகசியக்குறிப்பேடுகள்
எங்கள் குருதியில்
எழுதப்பட்டது
வேறவர் வரலா-றன்று
நேற்று முதன்முதலாய் பாடும் போது
இசை-மொழியின் அவல-மென்று
காதுகளை அடைத்துக்-கொண்டதும்
தணற்கனவுகள் வாளாய் வகிர
ஆயிரம் பாதமாகி
ஆடித்திளைக்கையில்
-தறித்த சங்கிலிக்கண்ணிகள் பட்டு
உம் சதங்கை நாவுகள்
ஊமையானதும்
ஜீவரகசிய சேர்மத்திரட்சியில்
அலையாகித்துடிக்கும்
சமுத்திரத்தை
மலட்டுச்சிப்பிகள் ஈனும்
நீர்ப்பாலை-யென்றே
பொருள் கொண்டதும்
---------------------
அடப் போங்கடா
பற்றிப்படர பந்தக்கால் தேடாது
சுயம் தேடி சூறையில்
அலையு-மங்கள்
உயிர் வழியும் -
மெளனம் அறியாத உங்களுக்கு
இக்கவிதை எதையும்
உணர்த்திவிடப்போவதில்லை
இருப்பினும்
முணுமுணுப்-பென்று நீங்கள்
நிராகரித்த எமது பிரகடனம்:
கோட்டையைத் திறக்க
சாவி கேட்டு
காத்திருக்காது யானைக்கூட்டம்.
- ஆதவன் தீட்சண்யா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications