க(டல்)ண் நீர்- அனந்த்
காலார நடை கொள்ள சென்றிருந்த
கடற்கரையோர காலை நேரம்
கடல் கொண்ட ஈரம் பெற்று
நிலம் மீண்ட கடற்காற்று......இதமானதாய்
முன்பு எப்போதும் போலவே, இன்றும்
நேற்றய தினம் குழந்தைகள் கட்டிய
மணல் வீடுகள் - இக்கணம் வரை
அப்படியே அழகானதாய்...
உயிரினம் தோன்றியது முதலில் கடலில்தான்
உடலிலும், உலகிலும் முக்கால் பங்கு நீர்தானாமே..!
எதையெதையோ யோசித்தபடி....
அன்னிச்சை செயலாய் நடை தொடர
தொலைதூர ஆழ்கடலில்
வலை ஒரு கையிலும் உயிர் ஒரு கையிலுமாய்
பாய்மரத்தில் ஒரு சிலர் - வாழ்க்கையை தேடி
எப்போதும் போலில்லாமல் அவன்.....எமனே-தான்
எருமை தவிர்த்து, அலைகள் மீதேறி
கரைகளை நோக்கி, பார்வையாலேயே
உயிர்களை உறுவியவாறு....
திகிலூட்டும் கதை கேட்டுஉறங்கிப்போன இளந்தளிர்கள் விழிக்கக்கூடுமோ அகண்ட கடலின் இருண்ட ஆழங்களுக்குள் குலை நடுங்கி, உயிர் ஒடுங்கி - அனந்த்([email protected]) இவரது முந்தைய படைப்பு: 1. புரிந்தால் சொல்லுங்களேன்...
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
திகிலூட்டும் கதை கேட்டு











Click it and Unblock the Notifications