க(டல்)ண் நீர்- அனந்த்

Subscribe to Oneindia Tamil

காலார நடை கொள்ள சென்றிருந்த
கடற்கரையோர காலை நேரம்

கடல் கொண்ட ஈரம் பெற்று
நிலம் மீண்ட கடற்காற்று......இதமானதாய்
முன்பு எப்போதும் போலவே, இன்றும்

நேற்றய தினம் குழந்தைகள் கட்டிய
மணல் வீடுகள் - இக்கணம் வரை
அப்படியே அழகானதாய்...

உயிரினம் தோன்றியது முதலில் கடலில்தான்
உடலிலும், உலகிலும் முக்கால் பங்கு நீர்தானாமே..!
எதையெதையோ யோசித்தபடி....
அன்னிச்சை செயலாய் நடை தொடர

தொலைதூர ஆழ்கடலில்
வலை ஒரு கையிலும் உயிர் ஒரு கையிலுமாய்
பாய்மரத்தில் ஒரு சிலர் - வாழ்க்கையை தேடி

எப்போதும் போலில்லாமல் அவன்.....எமனே-தான்
எருமை தவிர்த்து, அலைகள் மீதேறி
கரைகளை நோக்கி, பார்வையாலேயே
உயிர்களை உறுவியவாறு....

The scene in Nagapattinam திகிலூட்டும் கதை கேட்டு
உறங்கிப்போன இளந்தளிர்கள்
விழிக்கக்கூடுமோ அகண்ட
கடலின் இருண்ட ஆழங்களுக்குள்

குலை நடுங்கி, உயிர் ஒடுங்கி
என் உள் எழுந்த சுனாமி உணர்வலைகள்
வாழ்க்கைக்கும் வரமாட்டேன் இனி
உயிர் பறித்த மணற்பரப்பில், கால் தடம் பதிக்க...

- அனந்த்([email protected])

இவரது முந்தைய படைப்பு:

1. புரிந்தால் சொல்லுங்களேன்...
2. அயல் தேசத்து அடையாளங்களாய்...


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+