For Daily Alerts
Just In
நீ இல்லாத நான்- பாஷா
அந்திம நாட்களின்
இருண்ட இரவுகளோ இவை?
உன் சுவடுகள் வருடாமல்,
மூன்று இரவுகள் நினைவு தப்பி
கருந்துளையில் காணாமல் போய்விட்டது.
உன் குரல் எழுப்பாமல்
என் தொலைபேசி
உறக்கத்திலேயே உயிர் துறந்துவிட்டது
பூஜையறை, சமையலறை
இவற்றுடன் என்
உயிரிலும் ஒரு
வெற்றிடத்தை விதைத்துவிட்டாய்.
இப்பொழுதெல்லாம் எழுதும்
என் கவிதைகளை கிழித்தெறிகிறேன்
உன் பிரியத்தை எனக்கல்ல,
என் கவிதைக்கே கொடுத்தாயென்ற
பொறாமையால்...
கடல் நடுவில் மிதக்கும் கட்டையில்
தனித்து விடப்பட்ட குழந்தையாய்
கதறியழுகிறேன்!
வேலைபளு கொண்டவனாய்
வேதனை புதைக்க
வேடம் தரித்து திரிகிறேன்
இதயம் பிளக்கும் வேதனையை நீ
இல்லாத வெறுமைக்கு
சொல்லிக் கொண்டிருக்கிறேன்!
- பாஷா([email protected])
இவர் பெங்களூரில் பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றுகிறார்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]