For Daily Alerts
Just In
கோணல்கள்- ஈழநாதன்
விபச்சாரிகள் வாழ்க்கையை
வித்தியாசமான கோணத்தில்
படம் பிடித்துள்ளேன்
இயக்குநரின் பெருமிதம்!
ஈழத்தமிழர் வாழ்க்கையை
வித்தியாசமான கோணத்தில்
கவிஞர் சொல்லியுள்ளார்
விமர்சகரின் வியாக்கியானம்!
குழந்தைத் தொழிலாளர்
யாரும் பார்க்காத கோணத்தில்
பார்க்கப்பட்டுள்ளார்கள்
செய்தியாளரின் சிலாகிப்பு!
பெண்களின் பிரச்சனை
புதிய கோணத்தில்
அணுகப்பட வேண்டும்.
பேச்சாளரின் படபடப்பு!
தாழ்த்தப்பட்டவர்கள்
மற்றுமோர் கோணத்தில்
போராட வேண்டும்
அரசியல்வாதியின் ஆவேசம்!
இவர்களெல்லாம்
கோணத்தை விட்டு
எந்தப் பிரச்சனையை
நேராகப் பார்ப்பார்கள்!!
- ஈழநாதன் ([email protected])
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]