இலையுதிர்ந்துபோகும் எம் வசந்தகாலங்கள்...!
Subscribe to Oneindia Tamil
மனிதனைவிட
மரங்கள் மேலானது...!
கோபம்
பொறாமை
ஆணவம்
பழிவாங்கும் எண்ணம்
மூடநம்பிக்கை
இவை எதுவுமே
அவைகளுக்கு இல்லை..!
கொலைகள்
கொடுமைகள்
இரத்தம்
இவையெல்லாம்
மனிதனோடு போகட்டுமே
மரங்கள் என்ன குற்றம்
செய்தன...?
மரணம் வருமுன்பு
புன்னகைக்கும்
புற்றுநோய்க்காரன்போல...
இடம்பெயர்வதற்கு
இரண்டு நாள் முன்பு
பூத்துக் குலுங்கியது..!
சுமைகளை
தோளிலும்
நெஞ்சிலும்
சுமந்துகொண்டு
ஊரைவிட்டு ஓடிவந்தோம்..!
அதை...
சுமந்துவர முடியாது
என்ன செய்வேன்...?
எதிரிகளுக்கு அது...
வெறும் மரம்...!
எனக்கு அது
மாறாத ரணம்...!
இப்போது...
இலையுதிர் காலம் இல்லாமலே
இலையுதிர்ந்து நிற்கிறதாம்
என்
முற்றத்து மாமரம்...!!!












Click it and Unblock the Notifications