இன்னும் சுற்ற வேண்டும்எதேனும் தெரிந்து கொள்ள...- ரிஷி சேது
எல்லாம் தெரிந்தவர்கள் ஊரில் வாழ ஆசைப்பட்டேன்
ஊர் ஊர் ஊராய் சுற்றி வந்தடைந்தேன் இவ்வூருக்கு
முதலாவதாய் சந்தித்த நபர் இப்போது தான்
நட்சத்திரங்களை எண்ணி வந்ததாய் சொன்னார்
ஆகா எத்தனை என்றேன்?
உனக்கு எவ்வளவு எண்ணிக்கை தெரியுமெனக் கேட்டார்
நான் தலை சொரிந்து நிற்க
போதாது உன்னறிவு போ என்றார்
அடுத்ததாய் சந்தித்த நபர் சொன்னார்
இப்போது தான் கடல் நீரில்
கரைந்திருக்கும் உப்பை கணக்கெடுத்து
களைத்துப் போய் வந்தேன் என்ன வேண்டும் கேள் என்றார்
கேள்வியை மாற்றினேன்
அடுத்து என்ன செய்வதாய் உத்தேசமென?
காற்றில்லாமல் வாழம் வழி கண்தடறிய என்றார்
மரணத்திற்கப்பாலா என்றேன்?
முட்டாளே நினைத்துப்பார்
காற்றில்லாமல் வாழ முடியுமானால்
நிலவில், செவ்வாயில் தரையிரங்கி
நிலம் பிடிக்கலாமென்றார்..
ஐயா நீருக்கென்ன செய்வீரென்று
நிற்காமல் கிளம்பினேன் அங்கிருந்து
மூன்றாவதாய் சந்திதவர்
பறக்கும் வழி கண்டேனெற்றார்
ஆச்சர்யமெனக்கு ஐயா எப்படியென்றேன் எப்போதும் போல்,
பறவைச் சூத்திரம் தெரியுமாவென்றார்
தெரியாதென்றேன்
சொன்னாரெனக்கு
பசிக்கு உணவு
செரிக்க நீர்
அளவாய் நித்திரை
சுவாசம் நிறுத்தி சுவாசம் செய்தால்
அதானாலே அவைகள் வேகமென்றார்
ஐயா ஆகட்டும் நீங்கள் பறந்தீரா?
அதிகப்பிரசங்கி கேள்
நான் வழிதான் கண்டேன்
நீயும் முயற்சி செய் என்றார்..
எதுவும் புரியாமல்
அடுத்தவூர் பயணமானேன்
சிந்தனையில்
நட்சத்திரங்களை எண்ணினேன்
காற்றில்லாமல் வாழ்ந்தேன்
பறந்தேன்
இன்னும் சுற்ற வேண்டும்
எதேனும் தெரிந்து கொள்ள...












Click it and Unblock the Notifications