For Daily Alerts
Just In
விலகியே இரு- ஷைலஜா
தகாதன தள்ளி
வேண்டுவன விரும்பி
தண்டவாளப்பாதையில்
இணைந்து நடந்தோம்
நட்பு வலுத்தது
இன்பத்தில் இனித்து
துன்பத்தைப் பகிர்ந்து
நட்பில் கரைந்தோம்
வாழ்க்கையின் அர்த்தம்
புரியத் தொடங்கியது
பாரவண்டியைச் சுமந்து
பாதை மட்டுமே இலக்காய்
பயணத்தை மேற்கொண்டோம்
நட்பு என்று காதலாகிப்போனது?
ஒளியான நட்புப் பாதை
ஒலியான காதல் பாதையானதும்
மெளனத்துவம் கலைந்தது
வெளிச்சமும் நிழலும்
விடை பெற்றுக்கொண்டன
ஓசையின் ராஜ்ஜியத்தில்
வார்த்தைகள் வலுத்தன
வாழ்க்கை ரயில் தடம்புரளும்
வாய்ப்பு வருமுன் விழிப்போம்
வேண்டாம் நண்பனே
காயங்களை மறக்க
காலம் மருந்திடட்டும்
நட்பாகவே பழகு
விலகியே இரு
பயணம்
இனிதாகும்
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]