யார் இவன்?
Subscribe to Oneindia Tamil
முகில்கள் தழுவ முழுதாய் கொடுத்தாய்
உலகம் ஒளிர முழுதாய் எரித்தாய்
இரவும் பகலும் நிதமும் வரவாய்
நிலவும் நிழலும் உன்னால் வாழும்
வயது வரம்பு உனக்கு இல்லை
வருவதும் போவதும் உன் வேலை
கடலைக் குடிக்கும் தாகம் உனக்கு
வானம் அழுதால் தாங்கா மனது
தனிமை கொண்ட வாழ்வு உனக்கு
மரணம் தவிர்த்த தூங்கா வாழ்வு
இறைவன் ஏற்றிய அணையா விளக்கே
இதமாய் உதிக்கும் உந்தன் அழகு
சமமாய் கொடுக்கும் மன்னவன் நீயே
பாரினில் எனக்கிங்கு பார்வையும் நீயே
கார்மேக கூட்டத்தில் காணாமல் போனாய்
தார்மீக பெறுப்பென்று காரணம் சொன்னாய்
இருட்டினில் உந்தன் மறுபக்கம் கண்டேன்
இறைவன் அளித்த உண்மை விளக்கே
உதயத்தில் உதிக்கும் உன்னத தீபமே
மாலையில் மயங்கிடும் கன்னி தீபம்நீ
ஒருநொடி உந்தன் எரிதல் நின்றாலும்
உயிர்விடும் எந்தன் ஜீவனும் உனக்கு
- சபரி (mailto:[email protected])












Click it and Unblock the Notifications