தீர்ப்பு
-ந.ஹேமராஜ், லண்டன்
அவன் ஒப்புக்கொள்ளவில்லை-ஆயினும்
குற்றத்தை உறுதிபடுத்தாமல்
உங்களால் தண்டனை கொடுக்க முடிகிறதே!
இறந்தவனுக்குக்கூட துரும்பாகலாம்
சுற்றி உள்ள உறவுகளுக்கு...?
அவனது உயிரைவிட
உன்னதமானது-பெறுமதிப்புமிக்கது
பிரபஞ்சத்திலிருந்து உங்களால்
கொண்டுவர முடியுமா?
அசுரர்கள் வாழ்ந்தார்களாம்
இத்தனை நவீன யுகங்கள் கடந்தும்
இன்னும் சில எச்சங்கள்
இங்கே நடமாட்டம்!
மிக இலகுவாகப் பிடுங்கிவிட்டீர்.
ஒத்திகை ஒன்றை செய்துபாரும்,
இந்த மண்ணிலிருந்து
உன்னை அப்புறப்படுத்திவிட்டு
உன் வாரிசு.. உன் இளம் மனைவி...
அன்றொரு நாள்
மிக ஆரவாரமாக வந்து
அவனைத் தள்ளிச் சென்றீர்.
எங்கு தேடியும் இல்லை என்றுதான்
இப்போது பதில் வருகிறது.
அப்பா வேணும் என்று
அழுது அடம்பிடிக்கும்
அவனது தளிருக்கு
உன்னால் செய்ய முடிந்தது
இருந்தால் சொல்லும்....
உயிர்களை பிடுங்கவதை தவிர!
-ந.ஹேமராஜ், லண்டன் ([email protected])