ஜாதியிரண்டொழிய...
-ரிஷி சேது
காற்றில் சிதறும் வெண்பஞ்சு மேகமென
முன்னும்பின்னுமாய் அலைகிறதென்
எண்ணவோட்டங்கள்.....
என்னை மிதித்தேறிப் போகிறதுன்
ஜாதிய முகம்...
வக்காளத்துக்கு வந்த கட்சிகளும்
என்னை அவர்கள் ஜாதிய முகம் கொண்டே பார்த்தன....
சில ஆயிரம் வாக்குகளும்
பல நோட்டுகளும் கைமாறியபின்
மரணித்தன கரைவேட்டிகளின்
ஜாதிய முற்போக்கு சிந்தனைகள்...
உண்மையைச் சொன்னால்
இன்னும் வெளிச்சத்திற்கு வாரா
நந்தன் வித்தைகிறான்
அறுக்கிறான் படைக்கிறான்
மறக்காமல் பதில் மரியாதை
மலம்திண்ண....
இரட்டைக் குவளை வைத்தவனை
வாழ்த்தியபடி செல்கிறது ஜாதிய கட்சிகள்...
அவர்களுக்கு மீண்டும் உதவலாம்
ஓட்டுவங்கியென இவைகள்....
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
ஜாதிகள் இல்லையடி...
ஜாதியிரண்டொழிய...
எல்லாம் நம்பிக்கையை விதைதுப்போகின்றன
பாலைமணலென மாறிப்போன
என் இதயங்களில்...
இன்னுமொரு காலை விடிகிறது
தீண்டாகுவளையில் டீ குடிக்க....
ஜாதிய கொடுமை பேச அழைக்கிறார்
கட்சித்தலைமை....
-ரிஷி சேது