அழகர் மலையும் அந்திப்பொழுதும்….!
Subscribe to Oneindia Tamil

அந்திப் பொழுதில் ஒருநாள்
அழகர் மலையின் அடர்ந்த வனத்திற்குள்
நாம் இருவரும்
கை கோர்த்து நடந்த பொழுது
எதிர்காலம் பற்றி
எந்த கவலையும் இல்லை…
பச்சைப் பசுமையாய் மூலிகை மரங்கள்
அழகரின் அழகைப்பற்றி
பேசியபடியே மலை ஏறினோம்…
பார்க்கும் இடமெல்லாம்
குரங்குகள் கூட்டம்…
மந்திகளுக்கு வாங்கிய
பொரியையும், மாம்பழத்தையும்
மிச்சம் வைக்காமல்
நீயே தின்று தீர்த்தாய்…
அன்றைய தினம்
மாம்பழத்தை எதிர்பார்த்து ஏமாந்தது
மந்திகள் மட்டுமல்ல
நானும்தான்..
அன்று முதல் எனக்கு
மாம்பழத்தை கண்டாலே
அழகர் மலையும் உன் முகமும்தான்
நினைவிற்கு வருகிறது!.












Click it and Unblock the Notifications