ஊரடங்கு !!!!!
பொன்கவச கர்ணனுக்காக மனமிரங்குவோரே
வெண் கவச மருத்துவர்க்காய்
மனமிரங்கி உள்ளடங்குவீர்
கண்ணகி சிலை
தலைவர்கள் சிலை
தியாகிகள் சிலை
வீரர்கள் சிலை
எல்லாம் சாலை மறியல்
நீ ஊரடங்க வேண்டி !
நீ வீடடங்கி
அவனை வீடனுப்பு
இல்லை
உன்னை வீடனுப்ப
காடடங்கவும் கூடும் அவன்
மடிப் பிச்சை கேட்டு
மருத்துவனின் தாய்
காலணிகள்
காணாமல் போகட்டும்
பாதையெல்லாம் முள்ளாகி
கரடாகிப் போகட்டும்
ஊரடங்கா மக்களுக்காகவும்
ஊனுயிர் காக்கும் மருத்துவர்க்காகவும்
அனிதாக்கள் இல்லாமல் போனதற்கு காரணம்
யாராகவேனும் இருக்கட்டும்
சண்முகப்பிரியா இல்லாமல்
போனதற்கும் இன்னபிற
கவச உடையில் போராடும்
களப்பணியாளரை
கணநேரம் கூட
கண்ணயர விடாததற்கும்
நீ மட்டுமே காரணம்.
நீ என்றால் நீ மட்டுமே.
ஊரடங்காமல் சுற்றும் நீ மட்டுமே.
உள்ளடங்காமல்
ஊர் சுற்றும்
உங்களை
எமனை ஏமாற்றிக் காப்பாற்றி
பாசக்கயிற்றில்
தடுக்கி விழுந்தாள்
அந்த வெண்தேவதை.
ஊரடங்காதோருக்குத் தண்டனை
அவசர சிகிச்சை பிரிவில் பணி
காப்பாற்ற முடியவில்லை என்பதை
உழன்று தவித்துக் காத்திருக்கும்
உற்றாருக்கு சொல்லும் வலி.
- கெளசல்யா