For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Mother's day.. எதை எழுதுவது.. எதை விடுவது.. அம்மா!

Google Oneindia Tamil News

அம்மா உன்னைப்பற்றி எழுதுவது
என்றால் எதை எழுதுவது
எதை விடுவது

mothers day amma is special always

அப்போதெல்லாம் பிளாஸ்க்
கிடையாது அர்த்த ராத்திரியில்
தாய்ப்பால் பத்தாமல்
வீறிட்டும் அழும் உனக்கு
பால் கலக்க வெந்நீர் காய்ச்ச
ஓலை வச்சி தீப்பத்த வச்சி
நான் பால் பொடி கலக்கி
கண் தூக்கம் 'தொலைத்த
காலம் உண்டம்ம்மா என்று
நீ சொல்லி தான் எனக்கு
தெரியும் அம்மா

 Mother's day: ஆராரிராரோ.. நீங்க அம்மா செல்லமா.. சொல்லுங்கள் எங்களிடமும்! Mother's day: ஆராரிராரோ.. நீங்க அம்மா செல்லமா.. சொல்லுங்கள் எங்களிடமும்!

தலை பிரசவம் முடிந்து
தூக்கம் தொலைத்து
அம்மா முடியலமா
இரவெல்லாம் தூக்கமில்லை
பிள்ளை அழுதுகிட்டே இருக்கு
தூங்கின மாதிரியே இல்ல
என்று காலையில் நானொருனாள்
புலம்பி சோகமாய் நிற்க
போம்மா போ தாய்ப்பால்
இருப்பதே வரம் தான்
தாய்மையே சுகம் தான்
என்று சொல்லி தலை வருடி
நான் பிள்ளையை பார்த்துக்கறேன்
நீ போய் நல்லா தூங்கு
என்று சொல்லும்போது
நீ சொன்னது தான்
இது எல்லாம்

மழையில் நனைந்து நான்
வரும்போது ஏன் மழையில்
நனைஞ்ச என்று கேட்கும்முன்
கரித்து கொட்டிக்கொண்டு
துண்டு எடுத்து வர அப்பா
உள்ளெ போகும் முன்
முந்தானையை நீட்டும் முதல் கரம்
உன்னுடையது தானே அம்மா

அது மட்டுமா சூடு காப்பியும்
மிச்சேரும் நீட்டுவாய்
காபி சூடு தந்ததோ இல்லையோ
எனக்கு தெரியாது
நிச்சயம்
சூடு தந்தது உன் முந்தானையும்
அந்த முத்தான அரவணைப்பும் தான்

இப்போது நான் என் குழந்தைகளை
சளி காய்ச்சலுக்கு பயந்து
மழையில் குளிக்க விடுறதில்லை என்று
சொன்னபோது
அதை கேட்டு அப்படி
சிரித்து நீ சொன்னது
நீயெல்லாம் மழை வந்ததும்
உடுப்பை கழற்றி போட்டு
மழையில் ஓடிவிடுவாய்
இப்ப இப்படி பேசுற
குழந்தைகளை குழந்தைகளாய்
இருக்கு விடுங்க
என்று நீ சொன்ன ஒரு வார்த்தை
எனக்கு காலத்துக்குமான பாடம்

நீ ஐஞ்சாம் கிளாஸ் என்றாலும்
எப்போதும் பள்ளிவிட்டு வந்ததும்
பள்ளிப்பை எடுத்து
படிக்க சொல்லுவாய்
வீட்டுப்பாடம் முடிக்க சொல்லுவாய்
நீ எனக்கு பாடம் படிக்க
சொல்லி தந்ததே இல்லை
நீ எனக்கு சொல்லித் தந்த ஒரே பாடம்
நாங்கெல்லாம் படிக்கல
நீங்க நல்லா படிக்கணும்
நல்லா வரணும் ...

அம்மா நீ ஏன் படிக்கல என்று கேட்டபோது
அம்மா சொன்னது இது தான்
நான் நல்லா படிப்பேன்
வகுப்பிலே முதல் மார்க்
சொல்லும்போது பெருமிதம்
அவள் கண்களில் அப்படியே ...
ஆனா எட்டு பேர் கொண்ட
குடும்பம் சமாளிக்க அப்பா
என்னை அஞ்சாம் வகுப்புக்கு அப்புறம்
தோட்ட வேலைக்கு கூட்டிட்டு
போய்ட்டாரு னு சொல்லும் போது
உன் முகத்தில தெரிஞ்ச வலி
அந்த வயசிலும் என்னை எதோ செய்தது ....

உன் பிள்ளை நானும்
எப்பொதும் படிப்பில்
முதல் மதிப்பெண் தான்
உனக்கு ஆங்கிலம் தெரியாது
என்று தெரியாமலே உன்னிடம்
எத்தனையோ மனப்பாடம் ஒப்பித்திருக்கிறேன்
படித்ததும் ஓடி வருவேன்
புத்தகத்தை ஒரு கையில் வாங்கி
இன்னொரு கையில் புகைகுழலோடு
உலையை ஊதிக்கொண்டிருப்பாய்
நீ தேவதை அம்மா

ஒரு மீன் சட்டி சோறை
ஐஞ்சு பேரை வட்டமாக
உட்கார வைத்து
எல்லாருக்கும் ஊட்டி விட்டு
வளர்த்த உன் பாசம்
வயிறு வலி அந்த நாட்கள்
மாத விடாய் முடியல
என்று எந்த முணுமுணுப்பும்
உன்னிடம் கேட்டதில்லை
எங்களுக்காவே வாழ்ந்த தெய்வம்
நீ அம்மா

நீ எனக்கு தந்த அன்பில்
பாதியை என் பிள்ளைகளுக்கு
குடுக்க முடிந்தால் போதும் அம்மா
நானும் சிறந்த தாயாக

தாய்மை சுகம் அரிது அரிது
நான் தாயான சுகத்தை சிலாகிப்பதை விட
என் தாயின் நினைவுவைகளே
அசை போடுவதே பெரும் சுகம்

- இங்க்பேனா

English summary
Amma is not a word, its the highest respected relation for all.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X