அம்மா...! அம்மா...! அம்மா...!
Subscribe to Oneindia Tamil
அம்மா என்று, அழுதேன் நானே.
அம்மா..! உன்னை தான் அழைத்தேன் நானே.

கருவறையில் மிதக்கின்றேனே, எப்போ..?
தொப்புள் கொடி, அறுப்பாய் நீயே.
தாயே...! தாயே...! உன்னை, காண வேண்டுமே.
பிரசவலியில் துடிக்கின்றாயே.
இதோ பிறந்தேனே உனக்காகவே.
பிறந்த உடன் அழுத என்னையும்.
உந்தன் மார்போடு அணைத்து கொண்டிரே.
தாயே...! தாயே...! உந்தன் மகன் ஆனேன்.
உம் பசியை மறந்து, பால் கொடுத்தாயே.
என் நாற்றத்தையும், பரிமளம் என்கிறாயே.
உறக்கம் இன்றி, உறங்க வைத்தாயே.
உறங்கிய பின்னும், விழித்து ரசிப்பாயே.
முந்தானையில் என்னை ஒளிய வைத்தாயே.
நான் ஒளியில் வாழ, வெளிச்சமும் நீயே.
பள்ளியிலே சேர்த்து விட்டாயே.
சேற்றில் விழுந்த போதும், விதை போல் முளைக்க வைத்தாயே.
தவறான பாதையை மறைத்து வைத்தாயே.
தவறிய போதும், கரம் பிடித்தாயே.
கலங்கிய போது, கண்ணீரை துடைத்தாயே.
கலங்காதே கண்மணி என்று சொல்லி சிரித்தாயே.
எங்களை சந்தோஷமாக சிரிக்க வைக்கும் நீர்,
இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம் அம்மா..!
- திலிப்குமார்












Click it and Unblock the Notifications