அன்புள்ள அம்மாவுக்கு!
Subscribe to Oneindia Tamil
என்ன சொல்லி நான் எழுதுவேன்
தமிழ் சொற்கள் அனைத்தையும்
அள்ளி தந்தாலும் "அம்மா" என்ற
சொல்லில் உயிர், மெய்யில் அடங்கி போகும்
என் உயிரும் மெய்யும்
ஒரேயொரு முறை மட்டும்
நான் அழுது நீ சிரித்தாய்!
என் புன்னகை பூக்கள் அனைத்தும்
உன் கண்ணீர் பூக்கள்தானே - உன்னை
நான் தாலாட்ட வேண்டும்! - உனக்கு
நான் சோறூட்ட வேண்டும்!! -

செல்வங்கள் எல்லாம்
என்னை தேடி வந்தாலும் - திரை
கடலோடி நான் ஈட்டினாலும்
என் முதற் செல்வமும் நீதான்!
என் முழுச் செல்வமும் நீதான்
தாவி வரும் கடலையும் - மழை
தூவி விடும் வான் முகிலும்
அள்ளிதரும் வானமும் - மொழிச்
சொல்லி தரும் என் அன்னையின்
அன்புக்கு ஈடில்லை ஈடில்லை
என்னை போல் அன்னையை
நேசிக்கும் அனைவருக்கும்
இன்று மட்டுமல்ல வருடத்தின்
ஒவ்வொரு நாளுமே
அன்னையர் தினம் தான்!
- ஆ. ஜோஷி ஆலென்












Click it and Unblock the Notifications