For Quick Alerts
For Daily Alerts
Just In
நீங்கள்.. திருந்துவதெப்போது?
- வந்தனா ரவீந்திரதாஸ்
அறிவுப் பூட்டின்
திறவுகோலுக்கு
இன்று ஓர் அவமதிப்பா?
அடிமை விலங்கை
நொறுக்கியவரின் சிலைக்கு
ஓர் அவமானமா?
ராஜனே
உன் கடுந்தேள்
விஷம பேச்சினால்...
உணர்வுகள் வெடித்து...
உள்ளம் உடைகிறதே?
உன் வெறி கண்டு
கொடிய விலங்குகளே
கூனிக்குறுகி ஓடுகிறதே?
சாதி சாட்டையை
வெண்தாடி கிழவன்
சுழற்றியடித்தும்
நீ திருந்துவதெப்போது?
கறந்த பால் மடி புகுமா?
கண்துடைப்பு மன்னிப்பால்
கொந்தளிப்பு அடங்குமா?
திராவிட தமிழனை
துச்சமாக மதிக்கிறாயோ?
எச்சமென்று மிதிக்கிறாயோ?
ஈரோட்டு சிங்கத்துக்கு ஈடா?
பகுத்தறிவு பகலவனுக்கு ஓய்வா?
தொட்டுப்பார் சிலையை!
பெரியார் ஒரு கற்பூரம்...
அதன் வாசனை தெரியாதவர்கள்....?
Comments
அரசியல் பெரியார் தமிழ்நாடு பெரியார் சிலை எச் ராஜா பாஜக politics periyar tamil nadu periyar statue h raja bjp
English summary
Here is a poem on Periyar written by Vandana Ravindradoss after the Periyar statue issue rocked the state.